குயில்கள் எல்லாம் காக்கைகளின் பிள்ளைகள்! காக்கைகள் எல்லாம் குயில்களின் பெற்றோர்! எண்ணாதவர்க்குப் புரியாது இயற்கை எண்ணிப் பார்த்தால் இனிதாகும் வாழ்க்கை! =இலக்கியன்
ஆறறிவு மனிதர் சொல்வதை ஐந்தறிவு நாய் புரிந்து கொள்கின்றது! ஐந்தறிவு நாய் சொல்வதை ஆறறிவு மனிதர் புரிந்துகொள்வதில்லை! ஆறறிவு யாருக்கு? ஐந்தறிவு யாருக்கு? ஆராய வேண்டியுள்ளது! - இலக்கியன்
அறிவாளியின் பேச்சு அறிவற்றவனிடம் எடுபடாது! பெருமை மிகுந்தவரின் மதிப்பு பெருமையற்றவனிடம் செல்லுபடி ஆகாது! தரமற்றதிடம் பேசி... தரம் தாழ்ந்திட வேண்டாம்! மௌன வேலி அமைத்துக் கொள்க! மௌனம் வலியது! சொல்லை விட -எய்தும் வில்லை விட மௌனம் வலியது! மௌன வேலி அமைத்துக் கொள்க! -இலக்கியன்
ஓராயிரம் கனவுகளின் எடையை விட ஒரு கவலையின் எடை மிக அதிகம் ஓராயிரம் கவலைகளின் மதிப்பை விட ஒரு கனவின் மதிப்பு மிக அதிகம் கவலைகளைச் சுமக்கின்ற இதயப் படகு கரை சேர்வது இல்லை கனவுகளைச் சுமக்கின்ற இதயப் படகு கரை சேர்ந்து விடும் அருமை இதயமே அதனால் சுமக்காமல் கவலையைத் தவிர்க்கவும் சுமப்பதென்றால் கனவைச் சுமக்கவும். -இலக்கியன்