மௌனம் வலியது
அறிவாளியின் பேச்சு
அறிவற்றவனிடம் எடுபடாது
அறிவாளியிடம் மட்டுமே எடுபடும்!
பெருமை மிகுந்தவரின் மதிப்பு
பெருமையற்றவனுக்குத் தெரியாது
பெருமையுள்ளவர்க்கே தெரியும்!
தரமற்றதிடம் பேசித்
தரம் தாழாமல் இருக்க
மௌன வேலி அமைத்துக் கொள்க!
மௌனம் சொல்லைவிட வலியது!
-இலக்கியன்
கருத்துகள்
கருத்துரையிடுக