குயில்கள் எல்லாம் காக்கைகளின் பிள்ளைகள்! காக்கைகள் எல்லாம் குயில்களின் பெற்றோர்! எண்ணாதவர்க்குப் புரியாது இயற்கை எண்ணிப் பார்த்தால் இனிதாகும் வாழ்க்கை! =இலக்கியன்
ஆறறிவு மனிதர் சொல்வதை ஐந்தறிவு நாய் புரிந்து கொள்கின்றது! ஐந்தறிவு நாய் சொல்வதை ஆறறிவு மனிதர் புரிந்துகொள்வதில்லை! ஆறறிவு யாருக்கு? ஐந்தறிவு யாருக்கு? ஆராய வேண்டியுள்ளது! - இலக்கியன்
அறிவாளியின் பேச்சு அறிவற்றவனிடம் எடுபடாது! பெருமை மிகுந்தவரின் மதிப்பு பெருமையற்றவனிடம் செல்லுபடி ஆகாது! தரமற்றதிடம் பேசி... தரம் தாழ்ந்திட வேண்டாம்! மௌன வேலி அமைத்துக் கொள்க! மௌனம் வலியது! சொல்லை விட -எய்தும் வில்லை விட மௌனம் வலியது! மௌன வேலி அமைத்துக் கொள்க! -இலக்கியன்